×

உலக மகளிர் தினத்தையொட்டி விதவை பெண்கள் பூ வைத்து நெற்றியில் பொட்டு வைத்தனர்

கீழ்வேளூர், மார்ச் 12: உலக மகளிர் தினத்தையொட்டி விதவை பெண்கள் பூ வைத்து, நெற்றியில் பொட்டு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட விதவை பெண்கள் வாழ்புரிமை சங்கம் சார்பில் நாகை கலங்கரை கட்டிடத்தில் பெண்கள் தின மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க தலைவர் புஷ்பா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் விஜயபாரதி கென்னடி முன்னிலை வகித்தார். கலங்கரை இயக்குநர் குழந்தைசாமி வரவேற்றார். மாநாட்டில் புனித சமுதாய கல்லூரி இயக்குநர் பிராசிஸ்சேவியர், ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் கலைச்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.மாநாட்டில் கலந்து கொண்ட பெண்கள் நெற்றியில் குங்கும பொட்டும், தலையில் பூவும் வைத்து கொள்ளும் நிகழ்ச்சியும், சமுதாய விழப்புணர்வு நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகை மாவட்ட முழுவதிலும் இருந்து ஏராளமான விதவை பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags : women ,occasion ,World Women's Day ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது