×

விவசாயிகளுக்கு விருப்பமில்லை வியாபாரிகளும் வருவதில்லை 100 நாள் வேலையின்போது சுருண்டு விழுந்து பெண் தொழிலாளி பலி

அரியலூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகப்பாளையம் ஊராட்சியில உள்ள திருவெங்கனூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று ஊரின் வடபுறமுள்ள அய்யனார்குளத்தின் கரையில் மரக்கன்றுகள் நடுவதற்காக முட்களை 26 பேர் வெட்டி சுத்தம் செய்தனர்.

இதில் திருவெங்கனூர் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தரம் மனைவி கல்யாணி (55) எனபவரும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் போட்டு கல்யாணி கீழே விழுந்து இறந்தார். திருமானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கல்யாணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Tags : businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்