×

புதுக்கோட்டையில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 12: புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது-தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு 2வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தொ.மு.ச. பொது செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்க வேண்டும். 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...