×

டியூப் லைட், பேன், ஏசி பழுதடைகிறது புதுக்கோட்டையில் சீரான மின்சாரம் கிடைக்குமா?

சென்னை, மார்ச் 12: டியூப் லைட், பேன், ஏசி உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி பழுதடைவதால் புதுக்கோட்டையில் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று திமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு (திமுக) பேசியதாவது:புதுக்கோட்டை தொகுதி கருக்காகுறிச்சியில் 110 கேவி திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: அங்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ள. ஏற்கனவே கொடுத்த இடம் நீர்நிலை புறம்போக்காக இருப்பதால் மாற்று இடம் கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.பெரியண்ணன் அரசு: புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி, பட்டத்திகாடு ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு நடுவில் சரியான இடம் உள்ளது. மேலும் புதுக்கோட்டை நகர் பகுதிகளில் மின்சாரம் அதிகமாகவோ, குறைவாகவோ வரும் போது பியூஸ் போகிறது. அதை சரி செய்துவிட்டு சென்ற பிறகு வீட்டில் இருக்கக்கூடிய டியூப், பேன், ஏசி உள்ளிட்ட பொருட்கள் பழுதடைகிறது. சீரான மின்சாரம் கிடைக்க செய்ய வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அந்த அடிப்படையில் பணிகள் நடக்கிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் திடீரென மின்அழுத்தம் அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பதாக கூறுகிறீர்கள். அதுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயிகள் அதிகம் உள்ளனர். அதனால் மின்பளு அதிகமாக இருக்கிறது. அதற்காகவே இதுபோன்ற துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த 4 ஆண்டு காலத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 340 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடம் கிடைப்பதுதான் அரிதாக உள்ளது. அதை உறுப்பினர்கள் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக அமைத்து தர அரசு தயாராக உள்ளது.

Tags : PAN ,AC ,
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்