×

கந்தர்வகோட்டை அருகே நர்சிங் மாணவி மாயம்

கந்தர்வகோட்டை, மார்ச் 12: கந்தர்வகோட்டை அருகே கல்லுகொல்லையை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கந்தர்வகோட்டை அருகே கல்லுகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(43). இவரது மகள் வினோதினி(19). இவர் தஞ்சையில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2ம்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் ஜெயராமன் கந்தர்வகோட்டை காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து மாணவி காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : Nursing student ,Gandharvagotte ,
× RELATED நர்சிங் மாணவி திடீர் மாயம்