×

திருவாரூரிலிருந்து 1,000 டன் நெல் மூட்டைகள் கோவைக்கு அனுப்பப்பட்டது

திருவாரூர், மார்ச் 12:  திருவாரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 463 அரசு கொள்முதல் நிலைங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேற்றுமுன்தினம் வரையில் 4 லட்சத்து 80 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 40 கிலோ மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக அரைக்கப்பட்டு, வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காக அரிசியும் மற்றும் நெல்கள் ரயில் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கோவை மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : Thiruvarur ,Coimbatore ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...