×

ஆலங்காடு கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் கடனுதவி

முத்துபேட்டை மார்ச் 12: ஆலங்காடு கூட்டுறவு வங்கியில் பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டது.முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. கூட்டுறவு வங்கி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். முன்னதாக செயலர் ரெங்கநாதன் வரவேற்றுப் பேசினார். இதில் உதவி கள மேலாளர் லட்சுமணன் கலந்துக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் கடனுதவி வழங்கி பேசுகையில், உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் வகையில் இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிக்கு சென்று கூடுதல் வட்டியை தவிர்க்கும் வகையில் அரசு இந்த கடனுதவியை வழங்கி உள்ளது. இதனை சரியான முறையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தினால் அடுத்தமுறை தற்பொழுது தொகையில் இரண்டு மடங்கு கடனுதவி எந்த தடையும் இல்லாமல் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் மொத்தம் 12 குழுக்களுக்கு ரூ.2லட்சம் வீதம் மொத்தம் 24 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில் ஆலங்காடு, உப்பூர் செறுபட்டாகரை பகுதியை சேர்ந்த 168 பெண் பயனாளிகள் பயனடைந்தனர்.

Tags : Alangadu Co-operative Bank ,
× RELATED பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு