×

சிஏஏவுக்கு எதிராக போராட்டம் எஸ்டிபிஐ தலைவர் உள்பட 290 பேர் மீது வழக்கு

திருச்சி, மார்ச் 12: திருச்சியில் சிஏஏவிற்கு எதிராக போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சி பகுதி தலைவர் உள்பட 290 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சியிலும் முஸ்லிம் அமைப்பினர் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அரியமங்கலம் ராஜவீதியில் போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ தலைவர் இஸ்மாயில் மற்றும் 200 பெண்கள் உள்பட 290 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : CAA ,SDPI ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்