×

தனியார் வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நாளை நடக்கிறது

திருச்சி, மார்ச் 12: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  நாளை (13ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் 10 மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள், வயது வரம்பு 18 மேல் 35 வரை கலந்துகொள்ளலாம். நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் டிசி, மதிப்பெண் சான்றிதழ், ரேசன் கார்டு, ஆதார் கார்டு, மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வாய்ப்பினை தவறவிடாமல் நாளை (13ம் தேதி) காலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சி என்ற முகவரியில் நேரில் ஆஜராகி பயன்பெறுமாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Private Placement Camp ,Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...