×

அரசு ஊழியர்களுக்கு மார்ச் 17ல் விளையாட்டு போட்டி

ஈரோடு, மார்ச் 12: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் வரும் 17ம் தேதி ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் அரசு ஊழியர்ளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் குழு மற்றும் தடகள போட்டிகளில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம். 17ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் தடகளத்தில் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுபந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபாடி, மேஜைப்பந்து, கையுந்து பந்து போட்டிகளும், ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளும் நடக்கிறது. மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில், மாநில அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வரும் ஊழியர்கள் கலந்து கொள்ளலாம். அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். சீருடை பணியாளர்கள் இப்போடடியில் பங்கு பெற அனுமதியில்லை. தொழில்முறை விளையாட்டு வீரர்கள், ஒப்பந்த பணியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதியில்லை. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் வர வேண்டும். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் பணியாற்றி வரும் துறை வழியாக நுழைவு கடிதத்தினை மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Sports competition ,servants ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து