×

தீ விபத்தில் கூரை வீடு நாசம்

காட்டுமன்னார்கோவில். மார்ச் 12: காட்டுமன்னார்கோவில் அடுத்த விளத்தூர் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜா(39),  பெயிண்டர். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், சரண்ராஜ், சச்சின்ராஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் வீரர்கள் கொளஞ்சிநாதன் முகமதுகான், பன்னீர்செல்வம், அன்பரசன், மணிவண்ணன் ஆகிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுதது அணைத்தனர். மேலும் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை பாதுகாப்பாக வெளியே எடுத்து வந்து வயல்வெளியில் வைத்து எரிவாயு முழுவதையும் வெளியேற்றினர். தீ விபத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், ஆதார், குடும்ப அட்டை, பள்ளி புத்தகங்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Roof house ,
× RELATED நாகையில் பயங்கர தீ விபத்து: 7 கூரை வீடு...