×

ஏலச்சீட்டு நடத்தி ₹2 லட்சம் மோசடி செய்ததாக பெண் மீது வழக்கு பதிவு

கடலூர், மார்ச் 12: ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 லட்சம் மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் கவி காளமேக வீதியை சேர்ந்தவர் சந்தோஷ் ஸ்டாலின் (42). இவர் ஏல சீட்டு நடத்தும் சிவானந்தபுரம் பசுபதி மனைவி சுதாவிடம் ரூ. இரண்டு லட்சம் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி பதினான்காவது சீட்டை சந்தோஷ் ஸ்டாலின் ஏலம் கேட்டு எடுத்தார்.ஆனால் அந்த பணத்தை சுதா அடுத்த மாதம் தருகிறேன் என்று கூறி வந்த நிலையில் பணத்தை கொடுக்கவில்லை. இது பற்றி கேட்டதற்கு செலவு செய்து விட்டதாகவும், பணத்தை திருப்பித் தர முடியாது எனவும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை கேட்டால் தன்னை மானபங்கம் செய்து விட்டதாக போலீசில் புகார் கொடுப்பேன் என்று சுதா மிரட்டியுள்ளார்.இதையடுத்து சந்தோஷ் ஸ்டாலின், கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுதா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bidders ,
× RELATED தர்மபுரியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி...