×

வாலிபர் மீது தாக்குதல்

திட்டக்குடி, மார்ச் 12: திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (25). இவர் சம்பவத்தன்று புதுக்குளம் ஓடையில் மீன்பிடிக்க நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் (53) என்பவர் நண்பர்கள் 5 பேருடன் சென்று இங்கு மீன் பிடிக்கக்கூடாது எனகூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெய்சங்கர் மற்றும் 5 நண்பர்களுடன் டீக்கடையில் நின்று கொண்டிருந்த தனசேகரை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. திட்டக்குடி போலீசார் 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது