×

தீ விபத்து நிவாரணம் வழங்கல்

முஷ்ணம், மார்ச் 12: முஷ்ணம் அருகே கொழை ஊராட்சியில் ராஜேந்திரன் என்பவரின் கூரை வீடு நேற்று முன்தினம் இரவு தீபிடித்து எரிந்தது. இதில் வீட்டு உபயோக பொருட்கள், டிவி, பிரிட்ஜ், மனை பத்திரம் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது. சேதமதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு முஷ்ணம் வட்டாட்சியர் புகழேந்தி சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதுபோன்று ஒன்றிய துணை தலைவர் திருசெல்வம், கொழை ஊராட்சி மன்ற தலைவி பிரேமா இளையராஜா, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கிராம உதவியாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்