×

விஷம் குடித்து தொழிலாளி சாவு

கடலூர், மார்ச் 12: கடலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அருகே ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரன்(65), தொழிலாளி. சம்பவத்தன்று இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த வீரன், வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து வீரனின் மகன் அமிர்தலிங்கம், திருப்பாதிரிப்புலியூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...