புதுச்சேரி, மார்ச் 12: புதுச்சேரி, உப்பளம், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (40), பந்தல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சித்ரா (37). சம்பவத்தன்று அப்பகுதியில் வசிக்கும் ஜனா, சித்ரா வீட்டு வாசல் அருகே நின்று கொண்டு ஆபாசமாக பேசினாராம். இதை அவர் தட்டிக் கேட்கவே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ஜனா, அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து சித்ராவை தாக்கினார். இதை தடுத்த ஜெயபிரகாசையும் அடித்து உதைத்து மிரட்டல் விடுத்த ஜனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். முதலியார்பேட்டை போலீசார், ஜனா மீது வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.