×

அனுமதியின்றி மணல் கடத்திய வேன் பறிமுதல்

கரூர், மார்ச் 12: மாயனூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வேனை பறிமுதல் செய்து டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மாயனூர் அடுத்துள்ள வீரராக்கியம் பிரிவு அருகே வேனில் அனுமதியின்றி மணல் கடத்திச் செல்லப்படுவதாக மாயனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதி வேனில் இரண்டரை யூனிட் மணலை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் மணலை பறிமுதல் செய்த போலீசார், அனுமதியின்றி மணலை ஏற்றி வந்ததாக வேன் டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா