கரூர், மார்ச் 12: கோழி இறைச்சிக்கடையால் சுகாதாரகேடுஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கரூர் திண்ணப்பாநகர் பகுதிமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில்கூறியிருப்பது: திண்ணப்பாநகர் மெயின்ரோடு திருச்சிசாலை பகுதியில் 200 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள திருமண மண்டபம் எதிரில் கோழிஇறைச்சிக்கடை உள்ளது. இந்தகடையில் இருந்துகோழிக்கழிவுகளை வடிகாலில் கொட்டுகின்றனர். இதனால் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகமாகிறது.நோய்க்கிருமிகளை பரப்புவதாக இருக்கிறது. எனவே சுகாதாரக்கேட்டை போக்கும் இந்த கோழிஇறைச்சிக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.