×

சந்துக்கடைகளில் மதுவிற்பனை தடுக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், மார்ச் 12: கரூர் மாவட்டம் வீரியபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அனுமதியின்றி சந்துக்கடைகளில் மதுவிற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதுதொடர்ந்தால் போலிமதுபானம் விற்பனைக்கு வழிவகுக்கும். மேலும் பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மதுபாட்டில்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்துக்கடை மதுவிற்பனையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி...