×

சாத்தூர் அருகே கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது வழக்கு

சாத்தூர், மார்ச் 12: சாத்தூர் அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாத்தூர் அருகே சின்னஒடைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (49). இவர் நேற்று வீட்டின் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சண்முகையா (45), அவரது மகன் கனகராஜ் (20) இருவரும் முன் பகை காரணமாக சுப்பையாவை அடித்து காயபடுத்தி, கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் சுப்பையா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இருவர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : murder ,Chatur ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...