×

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

ராஜபாளையம், மார்ச் 12: ராஜபாளையத்தில் வாலிபர் தூக்கு மாட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துக்குமார் (29). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காமல் தந்தையின் பலசரக்கு கடையில், அவருக்கு உதவியாக இருந்து வந்தார். சிறு வயதிலிருந்து உடல் கோளாறுகளுக்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை