அருப்புக்கோட்டை, மார்ச் 12: அருப்புக்கோட்டை டவுன் தேவாங்கர் கமர்ஷியல் அசோசியேசனுக்கு பாத்தியபப்ட்ட அம்பிகை வித்யாசாலையின் 29வது ஆண்டுவிழா நடந்தது. தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். செயலாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். தலைமை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கையை வாசித்தார். டவுன் தேவாங்கர் மூன்று மிராசு உறவின்முறை நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மதுரை ஆடிட்டர் சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மோகன்தாஸ் நன்றி கூறினார்.