×

விவசாயி, பள்ளி மாணவன் உள்பட சிவகாசியில் 3 பேர் தற்கொலை

சிவகாசி, மார்ச் 12: சிவகாசியில் விவசாயி, பள்ளி மாணவன் உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்தவர் முத்துராமன் மகன் விக்னேஸ்வரன் (17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சரிவரப் போகாததால் அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த விக்னேஸ்வரன் விஷம் அருந்தி அங்குள்ள கண்மாய்கரையில் படுத்துவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் விக்னேஸ்வரனை எழுப்ப முயன்றபோது இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி மருதுபண்டியர் மடத்து தெருவைச் சேர்ந்தவர் அச்சுத்தொழிலாளி சண்முகக்கனி (40). இவர் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி அருகே நாரணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி கோபால்சாமி (56) சர்க்கரை நோய் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இவர் தன் விவசாய தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sivakasi ,school student ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து