×

காரைக்குடியில் 24 மணி நேரமாக போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காரைக்குடி, மார்ச் 12: காரைக்குடி மானகிரியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில், 24 மணி நேரத்திற்கும் மேலாக 400க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐஎன்டியூசி, உட்பட ஆறு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில இணை செயலாளர் குமார பிரசாத், கூறுகையில், கடந்த 1.9.2019 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்றாமல் உள்ளதை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று காலை முதல் 400க்கும் அதிகமான போக்குவரத்துக்கழக சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் போராடி வருகிறோம். விரைவில் தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வரை எங்களது உள்ளிருப்பு காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றார்.

Tags : Transport workers ,Karaikudi ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!