×

தனியார் வேலை வாய்ப்பு முகாம்


சிவகங்கை, மார்ச் 12: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நாளை மறுநாள் (மார்ச் 14)தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் நாளை மறு நாள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர், செவிலியர், லேப் டெக்னீசியன் படித்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் இலவச திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கு பதிவு மற்றும் ஆள் சேர்ப்பு, அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு வழி காட்டுதல், தொழில் நெறி ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 18வயது முதல் 40வயது வரையுள்ளவர்கள் தங்களது சுய விபரம், அசல் கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு போட்டோ ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Private Placement Camp ,
× RELATED தனியார் வேலைவாய்ப்பு முகாம்