ஒரத்தநாடு, மார்ச் 11: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த காயாவூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் வாட்டாத்திகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் தன்னை பற்றி அவதூறு செய்தி வாட்ஸ் ஆப் மூலமாக பரப்பப்படுகிறது. இந்த செய்தியை பரப்பி விட்ட திருவோணம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி துணை செயலாளர் செல்ல முருகேசன் என்பவரை கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செல்ல முருகேசனை தேடி வருகின்றனர்.