×

கும்பகோணம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது

கும்பகோணம், மார்ச் 11: கும்பகோணம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை நீடாமங்கலம் ரோடு தீரன்சத்தியா நகரை சேர்ந்தவர் சதீஷ்(30). இவர் அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். சதீஷின் ஹோட்டலில் உறவினர் மகன் வெங்கடேஷ் வேலை பார்த்து வந்தார். கடந்த 9ம் தேதி இரவு நீடாமங்கலம் ரோடு கன்னிகோயில் தெருவை சேர்ந்த விமல்(எ) உச்சாணிவிமல் (30), சாக்கோட்டை நீடாமங்கலம் ரோட்டை சேர்ந்த மணிமாறன் (எ) கட்டைமணி (29), இதே பகுதியை சேர்ந்த கார்த்தி (எ) போண்டா கார்த்தி (25) ஆகியோர் சேர்ந்து வெங்கடேஷை தாக்கினர்.

இதுகுறித்து கேட்டபோது சதீஷை 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர்.இதுதொடர்பாக நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் சதீஷ் புகார் செய்தார். அதன்பேரில் விமல், கார்த்தி, மணிமாறன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் 3 பேர் மீதும் காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், ரவுடி பட்டியலில் பெயரும் உள்ளது.

Tags : rounds ,Kumbakonam ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...