×

திரளான விவசாயிகள் பங்கேற்பு வலங்கைமான் பகுதியில் 145 பேருக்கு இலவச கோழி குஞ்சு வழங்கல்

வலங்கைமான், மார்ச் 11: தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் ரூ. 2.67 லட்சம் மதிப்பிலான விலையில்லா கோழிகுஞ்சுகள் 145பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டில் உள்ள மகளிர் பயனாளிகளுக்கு தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் விலையில்லா கோழிகுஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி வலங்கைமான் அரசு கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 145 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் ஆயிரத்து 845 வீதம் ரூ.2.67 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜெயபால் மற்றும் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : area ,Valangaiman ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு