×

ஊரக பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த துப்புரவு பணியாளர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர், மார்ச் 11: திருவாரூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக மகளிர் தின விழா திட்ட அலுவலரும் கூடுதல் கலெக்டருமான கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களில் சிறந்து பணியாற்றிய 29 தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தனிநபர் இல்ல கழிப்பறை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் ஊக்கமளித்த ஊக்குவிப்பாளர்கள் 29 பேர்கள் மற்றும் முதன்மை பயிற்றுநர்கள் 4 பேர்கள் ஆகியோருக்கு சிறந்த பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.இதில் மாவட்ட ஊராட்சி செயலர் கண்ணன், தூய்மை பாரத மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : areas ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்