×

2 வாகனங்கள் பறிமுதல் மன்னார்குடி அடுத்த வடுவூர் கோதண்ட ராமசுவாமி கோயிலில் தெப்ப திருவிழா

மன்னார்குடி, மார்ச் 11: வடுவூர் கோதண்ட ராமசுவாமி கோயிலில் தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.திருவாரூர், மன்னார்குடிக்கு அடுத்த வடுவூரில் உள்ள புகழ் பெற்ற வைணவ தலமான வடுவூர் கோதண்டராமர் ராமர் கோயிலில் வருடம் தோறும்  ராமரின் நட்சத்திரமான புனர் பூசத்தன்று தெப்பத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.விழாவையொட்டி கோயிலில் இருந்து சீதா தேவி, லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமி சமேதராக புறப்பட்ட கோதண்டராமர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அதனைத் தொடர்ந்து கோயிலின் பின்புறம் உள்ள சரயு புஷ்கரணி தெப்பக் குளத்தில் கட்டப் பட்டிருந்த பிரமாண்டமான தெப்பத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து விசேச தீபாராதனைகள், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது.

பின்னர் வாணவேடிக்கைகள் முழங்க தெப்போற்சவம் நடைபெற்றது.புண்ணிய குளமான சரயு புஷ்கரணி தெப்பக் குளத்தில் மூன்று முறை வலம் வந்து தெப்பத்தில் இருந்து அருள்பாலித்த கோதண்ட ராமரை குளத்தின் கரைகளில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தெப்பத்திருவிழாவை முன்னிட்டு டிஎஸ்பி கார்த்திக் உத்தரவின் பேரில் வடுவூர் இன்ஸ்பெக்டர் பசுபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : temple ,Vadavur Kothanda Ramaswamy ,Mannargudi ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...