×

வலங்கைமான் அருகே ரூ.50,000 மதிப்புள்ள வைக்கோல் தீயில் கருகியது

வலங்கைமான், மார்ச்11: வலங்கைமான் அருகே மாளிகைத்திடல் பகுதியில் கால்நடைகளின் பயன்பாட்டிற்கென சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.50 யாயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசம் ஆனது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த உத்தமதானபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி (65). அவர் மாளிகைதிடல் கிராமத்தில் குத்தகைக்கு சுமார் பத்து ஏக்கரில் சம்பா சாகுபடி மேற்கொண்டார். சம்பா அறுவடைக்கு பின் கால்நடைகளின் பயன்பாட்டிற்கென இயந்திரத்தின் உதவியோடு ரூ.500 கட்டு வைக்கோலை கட்டி அப்பகுதியில் உள்ள திடல் ஒன்றில் அடுக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசமானது. பாபநாசம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். இச்சம்பவம் குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் மூர்த்தி மர்ம நபர்கள் வைக்கோல் கட்டுகளுக்கு தீவைத்ததால்தான் வைக்கோல் எரிந்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Valangaiman ,
× RELATED விருப்பாச்சிபுரம் கடைவீதி பகுதியில்...