×

மீன் பண்ணைகளை பதிவு செய்ய கலெக்டர் வலியுறுத்தல்

திருவள்ளூர், மார்ச் 11: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை எண்.301, கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை நாள்.18.11.2013 ஆணையின்படி, அனைத்து மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகள், இறால் வளர்ப்பு பண்ணைகள் மற்றும் அலங்கார வண்ண மீன்கள் வளர்ப்பு பண்ணைகள் உட்பட அனைத்து மீன்வளர்ப்பு பண்ணைகளையும், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் பதிவு செய்து மீன்வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகள், இறால் வளர்ப்பு பண்ணைகள் மற்றும் அலங்கார வண்ண மீன்கள் வளர்ப்பு பண்ணைகள் அனைத்து விவரத்தினையும் உதவி இயக்குநர், மீன்வளத்துறை அலுவலகம், எண்.5, பாலாஜி தெரு, சங்கர் நகர், வெண்பாக்கம், பொன்னேரி, தொலைபேசி  044-27972454 என்ற முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,fish farms ,
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக...