சென்னை, மார்ச் 11: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டராகவும், திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ், காஞ்சி தாலுகா காவல் நிலையம், காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்
பெக்டர் பாஸ்கர் திருவாலங்காடு, அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் செங்கல்பட்டு தாலுகா.
செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், புதிய செங்கல்பட்டு மாவட்ட தனிபிரிவு இன்ஸ்பெக்டராக (ஸ்பெஷல் பிராஞ்ச்), மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் விழுப்புரம் மாவட்டம் வளவனூர், வளவனூர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மறைமலைநகர்.