×

கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டிஒய்எப்ஐ அமைப்பினர் மனு கொடுக்கும் போராட்டம்

காஞ்சிபுரம், மார்ச் 11: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் நடக்கும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி டிஒய்எப்ஐ சார்பில், கலெக்டா் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமவள அலுவலரிடம் மனுகொடுக்கும் போராட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது.சங்கத்தின் உத்திரமேரூர் வட்டத் தலைவர் உமேஷ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் காமராஜ், விநாயகமூர்த்தி, மோகன்தாஸ், கதிர், அலெக்சாண்டர், செந்தில்குமார், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலத் தலைவர் ரெஜிஷ்குமார், மாவட்டத் தலைவர் நந்தன், செயலாளர் புருஷோத்தமன், பொருளாளர் தேவகிருபை செல்வி ஆகியோர் கலந்து கொண்டு, பழவேரி கிராமத்தில் சட்டவிதிகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூடவேண்டும்.

அரும்புலியூர் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கல்குவாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அனுமதிக்கப்பட்ட கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கனிமவள அலுவலரிடம் கொடுத்தனர்.

Tags : DYFI ,
× RELATED மத்திகிரியில் டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்