×

இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது

திருவண்ணாமலை, மார்ச் 11: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு மணிலா எண்ணெய் ஆலை ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை பாவாஜி நகர் 1வது தெருவை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில், மணிகண்டன் கடந்த ஆண்டு இளம்பெண்ணை தனியாக அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தாராம். இதில், இளம் பெண் கர்ப்பமானார்.

இதுகுறித்து, அவர் மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு, மணிகண்டன் மறுத்து இதை வெளியில் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...