×

பராமரிப்பின்றி கலசபாக்கம் பஸ் நிலையம்: பொதுமக்கள் வேதனை

கலசபாக்கம், மார்ச் 11: பராமரிப்பின்றி கலசபாக்கம் பஸ் நிலையம் இருந்து வருவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். கலசபாக்கம் பஸ் நிறுத்தம் இடத்தில் பயணிகள் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பயணிகள் நின்று பயணம் செய்கின்றனர். பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது, கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் அமர்வதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் பழுதடைந்த இருக்கைகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுநாள் வரை நிறைவேற்றப்பட வில்லை. தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனி அலுவலர்கள் பொறுப்பில் இருக்கும்போது தான் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பிறகாவது பழுதடைந்துள்ள இருக்கைகள் அகற்றவிட்டு, புதிய இருக்கைள் அமைத்திடவும், பராமரிப்பு இன்றி சுகாதாரமற்று துர்நாற்றம் வீசுவதை தூய்மையுடன் பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kalasakkam Bus Stand ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...