×

குடியாத்தம் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவி பலாத்காரம் ஆந்திராவைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை கைது

குடியாத்தம், மார்ச் 11: குடியாத்தம் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மாணவி நேற்று முன்தினம் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்ததாக தெரிகிறது. இதனால், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள செங்கல் சூளையில் பணியுரியும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி(35) என்பவர், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு, அவரது வீட்டில் நுழைந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

பின்னர், இரவு வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி மாணவி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பரதராமி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் எஸ்ஐ சத்தியவாணி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிந்து செங்கல்சூளை தொழிலாளி ரவியை நேற்று கைது செய்தனர். மாணவியை பலாத்காரம் செய்த ரவிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : children ,house ,Andhra Pradesh ,Gudiyatham ,
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...