×

முதியவருக்கு 6 ஆண்டு சிறை

கடலூர், மார்ச் 11: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் அன்பழகன் (63). இவர், கடந்த 3-7-2018 அன்று அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு 16 வயது வாய்பேச முடியாத, நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பார்த்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமிக்கு வைத்தியம் பார்ப்பதாகக் கூறி அவரது 2 தம்பிகளையும் வீட்டிலிருந்து வெளியே அனுப்பி வைத்து விட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி தலைமையில் நடைபெற்று வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், அன்பழகனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்புக் கூறினார்.

Tags : prison ,
× RELATED கடலூர் மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்