×

மனைவி கண்டித்ததால் ஊழியர் தற்கொலை

பண்ருட்டி, மார்ச் 11: பண்ருட்டி அருகே மனைவி கண்டித்ததால் மனமுடைந்த மதுக்கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பண்டரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு மகன் முருகன் (47). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மதுக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி அமுதா தட்டிக்ேகட்டுள்ளார். இதில் அவர்களிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.சம்பவத்தன்று இரவும் முருகன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்தபோது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தம்பதியினர் படுத்து தூங்கினர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை அமுதா வேலைக்கு சென்றுவிட்டார். மகனும் பள்ளிக்கு சென்றுவிட்டான். ஆனால் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது முருகன், சேலையில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி அமுதா அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு