×

பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதல்

பண்ருட்டி, மார்ச் 11: பண்ருட்டியில் சிறுவன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்டதை தட்டிக்கேட்ட அவனது தந்தை இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். எதிர் தரப்பினரும் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் 7 பேர் மீது வழக்குபதியப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமு மகன் பரதன் (27). இவரது மூன்றரை வயது மகனை அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கலைச்செல்வன்(30) என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டாராம். இதைப்பார்த்த பரதன், கலைச்செல்வனிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த கலைச்செல்வன், அவரது தந்தை ரவிச்சந்திரன், உறவினர்கள் அபி, கரண் ஆகிய 4 பேரும் சேர்ந்து பரதனை அசிங்கமாக திட்டி இரும்பு ராடால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பலத்த காயமடைந்த பரதன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கலைச்செல்வன், அவரது தந்தை ரவிச்சந்திரன், உறவினர்கள் அபி, கரண் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிந்து ரவிச்சந்திரன், கரண் ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : collision ,Panruti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு