×

குளத்தூர் அருகே பாலத்தில் இடிந்துவிழுந்த சுவரால் விபத்து அபாயம் விரைவில் சீரமைக்கப்படுமா?

குளத்தூர், மார்ச் 11:  குளத்தூர் அருகே வேடநத்தம் சாலை பாலத்தில்  இடிந்துவிழுந்த பக்கச் சுவரால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் மக்கள் விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். குளத்தூர்  அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் இருந்து வேடநத்தம் செல்லும்  நெடுஞ்சாலை உள்ளது. இங்குள்ள வளைவில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. வேடநத்தம்  பகுதியில் பெருக்கெடுக்கும் மழைநீர் வடிந்து இப்பாலம் வழியாக வெங்கடாசலபுரம்  கிராமத்திலுள்ள கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வழியாக பயன்படுகிறது. அத்துடன் ராமேஸ்வரம் கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் திகழ்கிறது.

மேலும் இச்சாலை வளைவு குறுகிய வடிவில் உள்ள நிலையில் கடந்த  சில மாதங்களுக்கு முன்னர், பாலத்தின் ஒரு பக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்து  சேதமடைந்தது. மேலும் தண்ணீர் செல்லும் கால்வாய் வழிகளையும் மூடியபடி  உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பல முறை  புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்   இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுத்து விரைவில் சீரமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.

Tags : Klathoor ,bridge ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...