×

பிஎச்டி படிப்பு குறித்த தகராறில் தாக்குதல் பாளை தம்பதி மீது வழக்குப்பதிவு

நெல்லை, மார்ச் 11: பாளை கேடிசி நகர் பாரதிநகரை சேர்ந்த தேவேந்திரன் மகன் வினோத்குமார்(30). தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(26). மேல்படிப்பு படிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு நிலவி வந்தது. சந்தியா தனது பிஎச்டி படிப்பை தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தனது பெற்றோர் வீடு உள்ளதால் அவர்களும் உதவி செய்வர் என கூறியுள்ளார். இதற்கு வினோத்குமார் சம்மதிக்கவில்லை. நெல்லையில் தங்கியிருந்து பிஎச்டி பட்ட படிப்பை தொடருமாறு தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக பாளை தாலுகா காவல் நிலையத்தில் இருவரும் புகார் தெரிவித்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : attackers ,
× RELATED மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்ைக...