×

காரிப்பட்டி அருகே விவசாயி மனைவியிடம் 13 பவுன் தாலிச்செயின் பறிப்பு

அயோத்தியாபட்டணம்,மார்ச் 11: வாழப்பாடி அருகே உள்ள வைத்தியக்கவுண்டபுதூரை  சேர்ந்த விவசாயி குமரேசன் (47) இவரது மனைவி ரேவதி (37). இவர்களுக்கு 2  மகள்கள் உள்ளனர். குமரேசன் மனைவி ரேவதியுடன் பைக்கில் சேலத்துக்கு சென்றுள்ளார். காரிப்பட்டி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, பின்னால் பைக்கில் வந்த 3 இளைஞர்கள், ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 13  பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர்.இதுகுறித்து குமரேசன் காரிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Wife Near Karipatti ,
× RELATED கத்திமுனையில் டூவீலர் பறிப்பு