×

திருச்செங்கோட்டில் ₹15 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, மார்ச் 11: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ₹15 லட்சத்திற்கு எள், பருத்தி டெண்டர் நடந்தது. சின்னசேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் 150 மூட்டை எள் ரகங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வாங்க பவானி, அனுமன்பள்ளி, முத்தூர், காங்கேயம், திருப்பூர், திருச்செங்கோடு, சங்ககிரி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 30 வியாபாரிகள் வந்தனர். ரகசிய டெண்டர் முறையில் ₹10 லட்சத்திற்கு எள் விற்பனையானது. சிவப்பு எள் ₹102.30-₹124.20 வரையும், கருப்பு எள் ₹102.50-₹141 வரையும், வெள்ளை எள் ₹100.90-₹117.90 வரையும் விற்பனையானது. பருத்தி ரகங்களை முசிறி, புதுப்பட்டி, வடக்கு நல்லயம்பட்டி, தெற்கு நல்லயம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி காட்டன் ₹4689-₹5200 வரை விலை போனது. 330 மூட்டை பருத்தி ₹5 லட்சத்திற்கு விற்பனையானது.  

Tags : Tiruchengode ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து