×

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 11:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாடத்தில், இலவச வீட்டுமனை கேட்டு தொடர்ந்து மனு கொடுத்த 7 கிராமங்களுக்கு வீட்டுமனை வழங்கவேண்டும். முதியோர் உதவித்தொகை மாதம் ₹3 ஆயிரம் வழங்கவேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டை வழங்கவேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத்திட்டத்தில் நடைபெற்றுள்ள ₹64 கோடி முறைக்கேட்டை கண்டுபிடித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, மாநில செயலாளர் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.

Tags : Agricultural Workers' Union ,
× RELATED வேதாரண்யத்தில் ஒன்றிய அரசை கண்டித்து...