×

ராஜபாளையம் அருேக டூவீலரில் லிப்ட் கேட்டு வந்தவர் தவறிவிழுந்து சாவு

ராஜபாளையம், மார்ச் 11: ராஜபாளையம் அருகே டூவீலரில் லிப்ட் கேட்டு வந்தவர் தடுமாறி விழுந்து உயிரிழந்தார். ராஜபாளையம் அடுத்த முகவூர் முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (50). இவர் புனல்வேலி கிராமத்தில் தனது உறவினரை பார்த்துவிட்டு புத்தூர் தளவாய்புரம் ரெட்டை கண்மாய் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே டூவீலரில் சென்று கொண்டிருந்த முத்துச்சாமிபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்துவிடம் லிப்ட் கேட்டு வேல்முருகன் டூவீலரில் ஏறி சென்றுகொண்டிருந்தார். திடீரென டூவீலரிலிருந்து நிலைதடுமாறி சாலையோர கல்லில் விழுந்ததில் வேல்முருகனுக்கு தலை மற்றும் காலில் படுகாயம் ஏற்பட்டது.  ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் எஸ்.ஐ லவகுசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...