×

காரியாபட்டி அருகே நடந்த டூவீலர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் சீரியஸ்

காரியாபட்டி, மார்ச் 11:காரியாபட்டி அருகே நடந்த டூவீலர் விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காரியாபட்டி அருகே  ஆவியூர் கிராமத்தை சேர்ந்த பூமி மகன் மகேஸ்வரன். அவரது நண்பர் மாங்குளம் ஆறுமுகம் மகன் மாரீஸ்வரன். இவர்கள் இருவரும் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள எலியார்பத்தி டோல்கேட் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆவியூருக்கு டூவீலரில் திரும்பி வருந்துகொண்டிருந்தனர். அப்போது தனியார் தோட்டத்தின் அருகில் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் டூவீலரை ஓட்டி வந்து, ரோட்டின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியில் மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் டூவீலரை ஓட்டி வந்த மகேஸ்வரன்(29) தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மாரீஸ்வரன்(19) மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.   ஆவியூர் போலீசார் இறந்த மகேஸ்வரன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : accident ,Kariapatti ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...