கிருஷ்ணகிரி, மார்ச் 11: கிருஷ்ணகிரி அருகே, சந்தியா மகளிர் கல்லூரி எதிரே இயங்கி வரும், பாரத் ஸ்போர்ட்ஸ் அகமாமி சார்பில், தேசிய அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர். கிட்டம்பட்டி அரசினர் நடுநிலைப்பள்ளியில் பயிலும், மாணவர் நகுல் வெள்ளி பதக்கம் பெற்றும், வேளாங்கண்ணி மெட்ரிக்பள்ளி 6ம் வகுப்பு மாணவி சாந்தினி, குங்பு போட்டியில் தங்க பதக்கமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கிராண்ட் மாஸ்டர் ரஹமத் மற்றும் பள்ளி இயக்குனர்கள், பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர்.*