×

பைக் நிறுத்துவதில் பயங்கர அடிதடி

தேவதானப்பட்டி, மார்ச் 11: தேவதானப்பட்டி ஆர்எஸ்.புரத்தில் அடிதடியில் ஈடுபட்ட இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி ஆர்எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(33). இவருக்கும் வீட்டின் அருகே வசிக்கும் பாலகிருஷ்ணன்(45) என்பவருக்கும் வாகனத்தை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் அடிதடியில் ஈடுபட்டு காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு