×

தேன்கனிக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

தேன்கனிக்கோட்டை, மார்ச்11: தேன்கனிக்கோட்டை நேரு தெருவில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுதப்பட்டது. தேன்கனிக்கோட்டையில் நேரு தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்டடோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நடை பாதை வியாபாரிகள், சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர்.இதனால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்தும், வியாபாரிகள் தொடர்ந்து கடைகளை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து நேரு நகர் பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நேரு நகரில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், நடைபாதை வியாபரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. அனைத்து நடைபாதை கடைகளையும் பாராபட்சமின்றி அகற்ற வேண்டும். சிலர் சாக்கடை கால்வாய் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டியுள்ளனர். அதையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா